|
| பாக்.கில் உள்ள தீவிரவாதிகளை தாக்குவோம் : ஒபாமா |
| வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 15:29 IST ) | |
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் அல் - காய்தா தீவிரவாதிகள் மீது தமது அரசு தாக்குதல் நடத்தும் என பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பராக் ஒபாமா, வெற்றி பெற்று அதிபராவதற்கு மிகவும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாம் அதிபராக பதவியேற்றால் தமது அரசு பாகிஸ்தானில் உள்ள அல் - காய்தா தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் என்று ஒபாமா கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், செயல்படத்தக்கக்கூடிய அளவிற்கு உறுதியான புலனாய்வு தகவல் கிடைத்த பின்னரே தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|