யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22,000 ஆனது!
பீஜிங் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 12:24 IST )
சீன நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படும் நிலையில், 22 ஆயிரம் பேர் பலியானதாஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிச்சுயான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறுதியாக 22 ஆயிரத்து 69 பேர் பலியாகியிருப்பதாகவும், 1 லட்சத்து 68 ஆயிரத்து 669 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 4 தினங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 ஆயிரம் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன்பு 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. ஏராளமான வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

கடந்த 1976 ஆண்டு சீனாவில் நடந்த மிக மோசமான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜூன் 27 ல் ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்
கொழு‌‌ம்‌பில் தற்கொலைத் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி
நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்பு
மே 20-ல் இந்திய-பாக். பிரச்சனைகளுக்குத் தீர்வு : ஷெரீப் விருப்பம்
ஹனீப் மீதான வழக்கு பலவீனமானது!
ஜெய்ப்பூர் சம்பவத்தில் 'ஹ்யுஜி'க்கு தொடர்பு: வங்கதேசம் விளக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...