யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஜெய்ப்பூர் சம்பவத்தில் 'ஹ்யுஜி'க்கு தொடர்பு: வங்கதேசம் விளக்கம்
டாக்கா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008   ( 12:20 IST )
ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேசம், இந்தச் சம்பவத்துக்கு தமது நாட்டைச் சேர்ந்த ஹர்கத் - உல் ஜிகாத் - இ - இஸ்லாமி (ஹ்யூஜி) இயக்கத்தினர் காரணம் என அவசரப்பட்டு குற்றம்சாட்ட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வங்கதேச இடைக்கால அமைச்சரவையின் வெளியுறவு விவகார ஆலோசகர் இஃப்திகார் அகமது சவுத்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரக்கமற்ற, வெட்கக் கேடான இந்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஹ்யூஜி தீவிரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இந்திய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், முழுமையான விசாரணையை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே ஒரு முடிவுக்கு தாவக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு வங்கதேசம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட அவர், கொடுமையாகவும் கீழ்த்தரமாகவும் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் எவ்வித எல்லையையும் கொண்டிருப்பதில்லை என்று கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உணவு விலை உயர்வுக்கு உயிரி எரிபொருள் காரணமல்ல: யு.எஸ்.
சரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல்
மலேசியா : 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
வங்கதேசத்தில் ரயில்கள் மோதல் : 8 பேர் பலி
மேற்கு வெர்ஜினாவில் ஹிலாரி வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...