|
| வங்கதேசத்தில் ரயில்கள் மோதல் : 8 பேர் பலி |
| டாக்கா (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 12:45 IST ) | |
வங்கதேசத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
வங்கதேசம் தலைநகர் டாக்காவிலிருது 80 கி.மீ. தொலைவிலுள்ள பிரமன்பாரியா மாவட்டம் அசுகஞ்ச் ரயில் நிலையத்தில், நாகோலி எக்ஸ்பிரஸ் ரயில் தனது வழக்கமான பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த உபாபான் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இதில், இரண்டு ரயில்களிலும் சேர்த்து 6 பெட்டிகள் நொறுங்கின. இந்த கோர விபத்தில் ரயில் பயணிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்துக்குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வங்கதேசத்தில் மோசமான ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|