|
| காஷ்மீர் பிரச்சனையில் இன்னொரு போர் வேண்டாம் : பாக். |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 18:21 IST ) | |
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுடன் இன்னொரு முறை போர் நடக்க பாகிஸ்தான் விரும்பவில்லை என்று அந்நாட்டு ராணுவ அமைச்சர் சவுத்ரி அகமது முக்தர் கூறினார்.
இதுதொடர்பாக டான் நியூச் சேனலுக்கு பேட்டியளித்த அவர், இதுவரைக் கண்டிராத வகையில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக இருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் போர் ஏற்படுவதற்க்கான வாய்ப்பில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்த அவர், இரு நாடுகளும் தங்களது பழைமையான நிலைகளில் இருந்து நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது என்று தாம் நம்புவதாகவும், தாங்கள் போரில் சண்டையிட விரும்பவில்லை எனவும் கூறினார்.
மேலும், பொருளாதார அடிப்படையிலான உதவிகளை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறது என்றும், அதற்கு வழிவகை செய்யும் விதமாக எரிவாயு திட்டம் அமையும் என்றும் தெரிவித்தார்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|