|
| புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 30 பேர் பலி ! |
| கிளிநொச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 18:07 IST ) | |
இலங்கை மன்னாரில் விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் சண்டையில் அந்நாட்டு ராணுவத்தினர் 30 பேர் கொல்லப்பட்டனர்.
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக ' புதினம் ' இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
ஆர்ட்டிலெறிகள், மோர்ட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அவர்களுக்கு ஆதரவாக கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியதாகவும் அச்செய்தி கூறுகிறது.
ஆனால் இலங்கை ராணுவத்தினரின் இந்த படை முன்னகர்வு நடவடிக்கைக்கு எதிராக புலிகள் , காலை 8 மணி வரை கடுமையான முறியடிப்புத் தாக்குதலை நடத்தியதில் , 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான படையினர் படுகாயமடைந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை ராணுவ தரப்பிலிருந்ந்து இந்த தாக்குதல் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|