|
| எதிர்கட்சி துவங்கும் பத்திரிகைக்கு மலேசிய அரசு அனுமதி |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008 ( 15:57 IST ) | |
எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதிக் கட்சி துவங்கவுள்ள பத்திரிகைக்கு அனுமதி வழங்க மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளத்தது.
இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் சையத் அமீத் அல்பர் பேட்டியளிக்கையில், அந்த நாளிதழுக்கு தாம் ஒப்புதல் அளித்தாகவும், தனது அதிகாரிகளிடம் ஏன் அனுமதி அளிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.
பத்திரிகை சுதந்திரம் குறித்து குறிப்பிட்ட அவர், அரசு தனது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு பத்திரிகைகள் அடித்தளமாக அமைகின்றன என்றும், இதற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியமாகிறது என்றும் கூறினார்.
அண்மையில் மலேசியாவில் வெளியாகும் தமிழ் நாளிதழான 'மக்கள் ஓசை'க்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டதற்கு, மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டதால்தான் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
மலேசியாவில் பத்திரிகை தொடங்க வேண்டுமெனில், அதற்கு அரசின் அனுமதி வேண்டும் என்பதும், அதற்கான உரிமத்தைஆண்டுக்கொரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|