யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
காஸாவில் தாக்குதல் : யுனிசெஃப் கவலை
நியூயார்க் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2008   ( 14:57 IST )
பாலஸ்தீனத்தின் தலைநகர் காஸாவில் நடந்த தாக்குதல் சம்பவங்களுக்கு கவலைத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்), இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த புதன்கிழமையிலிருந்து காஸாவில் நடந்த கடும் சண்டையில் இதுவரை 17 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால், அந்நாட்டு குழந்தைகள் மன அழுத்தம் உள்ளிட்ட பெருத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போதைய சூழல் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஸாவில் நேற்று இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் பலியான சம்பவத்துக்கு, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சூழல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அவசர கூட்டமும் நடத்தப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக். பழங்குடியினர் பகுதியில் தற்கொலைத் தாக்குதல் : 22 பேர் பலி
ஈழத்தையும் தனி தேசமாக அங்கீகரிக்க புலிகள் கோரிக்கை
தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் சர்தாரி , ஃபகிம்
பாக்.புதிய பிரதமர் மார்ச் 12 ல் பதவியேற்பு ?
பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 38 பேர் பலி
கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் : 7 பேர் காயம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace