|
| ' பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை ' |
| பாரீஸ் (ஏஜென்சி), சனிக்கிழமை, 9 பிப்ரவரி 2008 ( 16:37 IST ) | |
பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக உலக பத்திரிகைகள் அமைப்பு கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :
கடந்த 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு 2006, 2007 ஆம் ஆண்டுகளில் தான், அதிகளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2003 ல் 53 பேரும், 2004 ல் 72 பேரும், 2005 ல் 58 பேரும், 2006 ல் 110 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கடந்த ஆண்டு 95 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஈராக்கில் 44 பேரும், சோமாலியாவில் 8 பேரும், இலங்கையில் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீது நடைபெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேரும் அடங்குவர்.மேலும் 'சாளரம்' பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் 'உதயன்' பத்திரிகையைச் சேர்ந்த ஒருவர் , 'நிலம்' பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆகியோரும் கடந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|