|
| பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 13:09 IST ) | |
மும்பை,தேசிய பங்குச் சந்தைகளில், இன்றும் சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. அந்நிய நாட்டு சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவுகிறது. இன்றும் நேற்று போலவே அதிக மாற்றத்துடன் இருக்கும்.
ஆசியாவில் இன்று பிலிப்பைன்ஸ், இலங்கை தவிர எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 14.67, தைவான் வெயிட் 14.39, ஜப்பானின் நிக்கி 112.96, ஹாங்காங்கின் ஹாங்செங் 169.34, சீனாவின் சாங்காய் காம்போசிட் 29.98 புள்ளிகள் அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகளில் நேற்று பிரிட்டன் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-13.84 புள்ளிகள் குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 52.81, எஸ்& பி 500-04.66, நாஸ்டாக் 06.70 புள்ளிகள் குறைந்தது.
காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.20 (NSE-nifty) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,279.50 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 44.47 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து. குறியீட்டு எண் 14,016.19 ஆக குறைந்தது.
ஆனால் மிட் கேப் 139.71, சுமால் கேப் 266.14, பி.எஸ்.இ 500-51.48 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1,774 பங்குகளின் விலை அதிகரித்தும், 217 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 30 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.985.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.04.99 கோடி மதிப்புள்ள வாங்கியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|