|
| ரூபாய் மதிப்பு 130 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 16:05 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் காணப்பட்ட அபார முன்னேற்றம் காரணமாக, அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 130 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 49.40 / 42 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 92 காசுகள் உயர்வுடன் 48.48/52 ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு, பின்னர் 130 காசுகள் உயர்வுடன் 48.10 ஆக காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை காணப்பட்ட அபார முன்னேறம் மற்றும் அன்னிய முதலீடு வரத்து அதிகரித்தது போன்றவையே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணம் என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|