யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் குறைந்தது!
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 மே 2009   ( 15:48 IST )
கடந்த முன்று வாரங்களாக அதிகரித்து வந்த பணவீக்கம் குறைந்தது. மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.48 விழுக்காடாக குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 0.70 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் மே 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பருப்பு, சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் தேயிலை, மாசலா பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

இதில் தேயிலை விலை 2%, ராகி விலை 17%, சோளம், பழங்கள், காய்கறிகள், உளுந்து விலை தலா 1% அதிகரித்துள்ளது.

ரப்பர், சூரியகாந்தி விதை தலா 6%, உல்லன் 24%, பருத்தி 2%, கொப்பரை தேங்காய் 1% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பட்டு விலை 2%, புகையிலை விலை 1% குறைந்துள்ளது.

எரி எண்ணெய், நாப்தா விலை தலா 3%, இலகு ரக டீசல் விலை 1% அதிகரித்துள்ளது.

தார், விமான பெட்ரோல் விலை தலா 1% குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை 4%, சர்க்கரை விலை 3% அதிகரித்துள்ளது.

ஆனால் கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், வெல்லம் விலை தலா 1% குறைந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 138 புள்ளிகள் புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 475 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வு
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...