|
| சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 12:54 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 334 புள்ளிகள் உயர்வுடன் 10,276 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 18 புள்ளிகள் சரிவுடன் 10,258 ஆக காணப்பட்டது.தொடர்ந்து சரிவை சந்தித்த சென்செக்ஸ் 10,230 புள்ளிகள் அளவிற்கு வீழ்ச்சியடைந்து, பின்னர் 10,339 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 10,290 ஆக காணப்பட்டது.
சத்யம் மற்றும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.கிராஸிம், ஸ்டெர்லைட் ஆகியவை தலா 4.3 % உயர்ந்து காணப்பட்டன.
ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏசிசி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
ஹிண்டல்கோ, பெல் மற்றும் ரான்பாக்ஸி ஆகியவை தலா 2 % உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.8 %, டாடா பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டரக்சர் ஆகியவை தலா 1.5 % சரிந்து காணப்பட்டன.லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் என்டிபிசி ஆகியவை தலா 1.3 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 3,126 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|