|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 ஜனவரி 2009 ( 12:36 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48.58 / 60 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து 48.20 ஆக காணப்பட்டது.
ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்த வட்டிக் குறைப்பு மற்றும் மத்திய அரசு அறிவித்த இரண்டாவது கட்ட பொருளாதார சலுகைகள் போன்றவை காரணமாக பங்குச் சந்தையில் இன்று காணப்பட்ட முன்னேற்றத்தின் தாக்கம், ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|