|
| சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 11:53 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11 மணி அளவில் சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்வுடன் 9,163 ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் அதில் லேசான சரிவு ஏற்பட்டபோதிலும், பின்னர் மீண்டும் உயர்ந்து, முற்பகல் 11 மணியளவில் 203 புள்ளிகள் உயர்ந்து 9,296 ஆக காணப்பட்டது.
வங்கிகள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் தொடர்ந்து ஏற்றமுடன் காணப்பட்டன.உலோக நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் ஆட்டோ நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் தலா 6 % உயர்ந்து காணப்பட்டன. அதேபோன்று ஹெச்டிஎப்சி வங்கி 4.7 %, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.3 % உயர்ந்து காணப்பட்டன.
டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் ஆகியவை தலா 3.5 % உயர்ந்து காணப்பட்டன.டாடா ஸ்டீல், டிஎல்எப்,லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தலா 3.3 % உயர்ந்து காணப்பட்டன.ஹிண்டல்கோ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
ஆனால் மாருதி 3.5 %, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 2,823 ஆக காணப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|