|
| சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 10:31 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் இழப்புடன் 9,291 ல் நிலைகொண்டது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 9,084 ஆக காணப்பட்டது.அடுத்த சில நிமிடங்களில் அது 279 புள்ளிகள் சரிந்து 9,012 ஆக காணப்பட்டது.
ஸ்டெர்லைட் 5 % , ஏசிசி மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 4.5 % சரிந்து காணப்பட்டன.மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 6 % சரிந்து காணப்பட்டன.
ஹெச்டிஎப்சி, ஹிண்டல்கோ, ரிலையன்ஸ் மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.
அதேபோன்று சத்யம், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 79 புள்ளிகள் சரிவுடன் 2,721 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|