|
| சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 25 ஆகஸ்டு 2008 ( 11:26 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது 158 புள்ளிகள் உயர்வுடன் 14,401 ல் நிலைகொண்டது.
இந்நிலையில,இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 14,672 ஆக காணப்பட்டது.
பின்னர் காலை 10.35 மணியளவில் அதில் லேசாக சரிவு ஏற்பட்டு 14, 630 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஹெச்டிஎப்சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஏசிசி, டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ,பெல், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்வுடன் 4,382 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|