|
| 'நானோ' விவகாரம் : பிரணாப் - புத்ததேவ் ஆலோசனை |
| கோல்கத்தா (ஏஜென்சி), சனிக்கிழமை, 23 ஆகஸ்டு 2008 ( 16:11 IST ) | |
'நானோ' கார் தயாரிப்பு திட்டம் அமையவுள்ள சிங்குரிலிருந்து வெளியேறிவிடுவோம் என ரத்தன் டாடா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் இன்று ஆலோசனை நடத்தினர்.
கோல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பிரணாப் முகர்ஜி, விமான நிலையத்தில் மேற்கு வங்க முதல்வரைச் சந்தித்துப் பேசினார்.
சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், சிங்குர் விவகாரத்தில் தீர்வு காண்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது.
ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ள சிங்குரில் போராட்டமும், வன்முறையும் தொடர்ந்தால், தாங்கள் அங்கிருந்து வெளியேற நேரிடும் என மேற்கு வங்க மாநில அரசுக்கு ரத்தன் டாடா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|