|
| சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 ஆகஸ்டு 2008 ( 18:06 IST ) | |
சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 292 புள்ளிகள் சரிவுடன் 15,212 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், வர்த்த்கம் தொடங்கிய சிறிது நேரத்தில் 199 புள்ளிகள் சரிந்து 15,013 ஆக காணப்பட்டது.
பின்னர் சென்செக்ஸ் புள்ளிகளில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு 74 ஆக குறைந்து 15, 138 ஆக காணப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி, மாருதி, டிஎல்எப், ஒன்ஜிசி, ஹெச்டிஎப்சி மற்றும் கிராஸிம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் 15,093 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 4,529 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|