யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 401 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008   ( 11:17 IST )
சென்செக்ஸ் இன்று காலை 10.50 மணியளவில் 401.66 புள்ளிகள் சரிந்து 13,124.33 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது, அதன் குறியீட்டெண் 72 புள்ளிகள் உயர்ந்து 13,526-ல் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.

இதற்கு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்டு வரும் பாதகமான நிலையின் எதிரொலியே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேலும், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொள்வது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளதால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களிடம் உள்ள பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதும் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளின் மதிப்பும் சரிந்திருந்தன.

இதனிடையே தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாக சரிந்துள்ளது. காலை 10.52 மணியளவில் நிஃப்டி 116.65 புள்ளிகள் சரிந்து 3,913.35 ஆக இருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு
10 பேர் பணிபுரியும் நிறுவனத்திலும் பி.எஃப்: மத்திய அரசு
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
பணவீக்கம் : மக்களுக்கு விளக்கமளிக்க அரசு விளம்பரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...