|
| நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு... |
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை மிகவும் எச்சரிக்கையாக கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கான சில வழி முறைகளைப் பார்ப்போம்.
* நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம்.
* தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும். குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். பிரசவ காலத்தில் சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.
* மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. வேலை செய்தாலும் மிகவும் சாதாரணமாகவும் அமர்ந்த நிலையில் தான் வேலை செய்ய வேண்டும்.
* வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
* குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை அணியாதீர்கள். அதிகமான நகைகளையும் அணிந்திருக்காதீர்கள்.
* எப்போதும் ஒருவரது துணையுடன் இருங்கள். எங்கே செல்வதாக இருந்தாலும் ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். வெகு தூரப் பிரயாணத்தை தவிர்த்துவிடுங்கள்.
* இறுக்கமான ஆடைகளை நிச்சயமாக அணியக் கூடாது. உங்களது உடல் உறுப்புகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* குளிக்கும் போது மார்பகக் காம்புகளில் வரும் சிறு பருக்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு சுடு தண்ணீரில் கழுவி விடுங்கள்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரசவ தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னரே மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள்.
* பிரசவ தேதி வரை வயிற்று வலி இல்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். சிலருக்கு பிரசவ வலியே வராமல் இருக்கும். ஆனாலும் குழந்தை சரியான இடத்திற்கு வந்துவிடும். எனவே மருத்துவரை நாடுகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - 10 ம் வகுப்பு தேர்வில், ஊனமுற்றோருக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்க தமிழக அரசு தேர்வுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | 1977 - விமர்சனம் | | கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன... |
| |
|
|
|
|
|
|