|
| வனப்பை கூட்டும் தேங்காய் | | - தொகுப்பு : கணேஷ் மரியதாஸ் |
|
சட்னி, சாம்பார், ஸ்வீட் என்று நாக்கை சொக்கவைக்கும் சமையல் ஐட்டங்களில் சுவையூக்கியாக விளங்கும், ஓர் அழகு வள்ளலும் கூட. தலை முதல் பாதம் வரை மென்மையும் பளபளப்பும் தந்து, தன்னம்பிக்கையோடு நடைபோட வைக்கிறது. தேங்காய்யின் சில அழகு குறிப்புகள் இதோ.
வழுக்கை தேங்காயை அரைத்து, அத்தோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். மேலும் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.
கோடை வெயில் கொளுத்துகிறதே, முகத்தை என்ன தான் பொத்திப் பாதுகாத்தாலும், வெளியே சுற்ற வேண்டியவர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துதான் போகும்.வெயிலிலால் வரும் கருமையை விரட்டி அடிக்க ஒரு அசத்தல் பேஸ்ட் இதோ.
தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் ஆகிய இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் போட்டு, காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை செய்தால் முகம் பிரகாசமாகும். முகத்துக்கு நிறத்தை கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மெண்ட் இது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|