|
| செவித்திறனை பாதுகாக்க... | |
நாம் அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கு ஏற்படும் ஓர் குறைபாடு தான் செவித்திறன் இழப்பு. மிகவும் மென்மையான உறுப்பான காது, ஒருமுறை தனது கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதை மீண்டும் பெறுவது மிகக் கடினம்.
காதுகளை முறையாக பராமரிப்பதன் மூலம் காது கேட்கும் திறனை பாதுகாக்க முடியும். பராமரிக்கும் முறைகள்:
* காதுகளின் வெளிமடல்களை உலர்ந்த மென்மையான துணியால் சுத்தம் செய்யவும்.
* அதிக ஓசை ஏற்படும் போது காதுகளை பொத்தி பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற ஓசைகளை அதிக நேரம் கேட்பது மிக ஆபத்து. * காதுகளில் அடிபட்டால் அல்லது வலி ஏற்பட்டால் அல்லது திடீரென கேட்கும் திறன் குறைவது போல் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
* காது கால்வாயில் உள்ள மெழுகு போன்ற பொருள், காதுகளை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மெழுகு கசிவதால் காது கேட்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.
சிகிச்சைகள்:
* திடீர் விபத்துகளினால் காதுகளில் பாதிப்பு ஏற்பட்டு, செவித்திறன் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. முறையான மருத்துவச் சிகிச்சைகள் மூலம் காயங்களை குணப்படுத்தி செவித்திறனை பாதுகாக்கலாம்.
* முதுமை, நரம்புத் தளர்ச்சி, காதில் விழும் பலமான தாக்குதல் மற்றும் அளவுக்கு அதிகமான ஓசையை கேட்பது போன்ற காரணங்களினால் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தமாகவே செவித்திறனை பாதித்துவிடும்.
இதுபோன்ற தருணங்களில் காதுகேட்கும் கருவிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|