|
| இதயநோயை முன்கூட்டியே தடுப்போம் |
பெரும்பாலானோரிடம் இன்று காணப்படும் வியாதிகளில் இதய நோயும் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு காரணம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது தான்.
உணவில் நாம் சேர்க்கும் நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை போன்றவைகளும், நண்டு, ஈரல், மூளைக்கறி போன்ற அசைவ உணவுகளும் ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேரக் காரணமாக உள்ளன.
இவ்வாறு ரத்தத்தில் சேரும் கொழுப்புகள் ரத்தக் குழாயின் பாதையை குறுகலாக்கி, அடைப்பை உண்டாக்குகின்றன. இது, கடைசியில் உயிரைக் குடித்து விடுகிறது.
எனவே, உணவு முறைகளை மாற்றி எண்ணெயை அளவோடு சேர்த்துக் கொள்வது தான் உடலுக்கு நல்லது. வறுத்தல்- பொறித்தலுக்கு நான்-ஸ்டிக் பாண்டங்களைப் பயன்படுத்தலாம்.
பாலைப் பொருட்தவரை எருமைப் பாலைவிட பசும்பால் உடலுக்கு நல்லது. பழைய எண்ணெயை சூடாக்கி மீண்டும் பயன்படுத்துவது கேடு தரும். அசைவ உணவு வகைகளை பெரும்பாலும் பொறிக்காமல், வறுக்காமல் சாப்பிடுவது நல்லது. ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளில் கொழுப்பு அதிகம் என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்மை தரும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|