|
| வீட்டிலேயே மருத்துவ சேவை : பிரதிபா பாட்டீல் யோசனை |
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அவர்களின் வீட்டிலேயே மருத்துவ சேவை வழங்குவதற்கான முயற்சிகளை செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உலக சுகாதார தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அவர்களின் வீட்டிலேயே மருத்துவ சேவை வழங்குவதற்கான முயற்சிகளை செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கிராமப்புறங்கள், மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதியிலும் மருத்துவ சேவை வழங்க செவிலியர்கள் உதவ வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
நோய்களைத் தடுப்பதிலும், ஆரோக்கியமான நிலையை வழக்கப்படுத்திக் கொள்ளும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செவிலியர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்றும் பிரதிபா பாட்டீல் குறிப்பிட்டார்.
செவிலியர்கள் தங்களின் அடிப்படை கடமையோடு, சமூக பொறுப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|