|
| இன்று உலக ஆஸ்துமா தினம் |
| செவ்வாய்கிழமை, 5 மே 2009 ( 17:22 IST ) | |
உலகம் முழுவதும் இன்று உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில், பொதுமக்களிடையே ஆஸ்துமா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
ஒருவருக்கு தொடர்ந்து சளிப்பிடித்தால் அவர்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி அதனை தொடர்ந்து தும்மலும் இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி இருமல் தாக்கி நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயை கிருமிகள் தாக்குகிறது.
இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி சிற குழாய்கள் பாதிப்பு அடைகிறது.அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.
இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் சிறு குழாய்களை தாக்குவதால் மூச்சுக்குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளிவரவும் முடியாமல் தடங்கலாக இருக்கிறது.
காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான் வீசிங் என்ற சத்தம் கேட்கிறது.
உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பலாம்.ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது நல்லது.
உதாரணமாக பழங்கள், தயிர் போன்ற உணவு பொருட்களையும், செல்ல பிராணிகளை வளர்ப்பதையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.தூசு பறக்கும் ஆலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஆஸ்துமா தாக்கும் அபாயம் உள்ளது.
ஆரம்பநிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம்.இல்லையென்றால் இது வீரிய தன்மை பெற்றுவிடும்.ஆஸ்துமா முதிர்ந்த நிலைக்கு சென்றுவிட்டால், பிராணவாயு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.எனவே ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு... |
| |
|
|
|
|
|
|