|
| ஜன.8ல் தேசிய மனநல மாநாடு! |
| ஆக்ரா (ஏஜென்சி), 6 ஜனவரி 2009 ( 13:11 IST ) | |
ஆக்ராவில் 61வது தேசிய மனநல மாநாடு வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ஆக்ரா மனநல மருத்துவமனை தொடங்கப்பட்டு, இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த மருத்துவமனையுடன் ஆக்ரா மனநல கழகமும் இணைந்து தேசிய மனநல மாநாட்டை நடத்தி வருகிறது.
௦61வது ஆண்டாக இந்த ஆண்டும் மனநல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வரும் 8ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் மனோதத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த, மனநல மருத்துவத்தில் புகழ்பெற்ற 35 பேர் மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.
சார்க் நாடுகள் மற்றும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் மனநல சங்கங்களின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் மனநலம் பற்றிய நவீன சிகிச்சைகள், மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|