யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
ஊக்க மருந்துகளால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து
'ஸ்டீராய்ட்' எனப்படும் ஊக்க மருந்துகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக அளவில் வழங்கக் கூடாது என்று ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக கனடாவில் உள்ள மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதன்படி சுமார் 1,800 பெண்கள் இது தொடர்பான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

முன் கூட்டியே பிரசவம் ஆகலாம் என்று கருதி, கருவில் உள்ள குழந்தையின் நுரையீரல் வளர்ச்சிக்காக ஸ்டீராய்டை அளிப்பதால், குழந்தை சிறிதாகப் பிறக்க வாய்ப்பு இருப்பது இதில் தெரிய வந்தது.

அதிக அளவில் ஸ்டீராய்டு கொடுக்கப்பதால் மகப்பேறின் போது குழந்தை இறக்க நேரிடலாம் என்றும், மூளையில் ரத்தக் கசிவு உண்டாகலாம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் ஒரேயொரு முறை மட்டுமே ஸ்டீராய்டை வழங்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாக்டர் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை
வங்கி அதிகாரி உறுப்பு தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
மியூசிக் கேட்டால் கொழுப்பு குறையும்!
தண்டுவட பாதிப்புக்கு புதிய சிகிச்சை!
தட்டம்மை உயிரிழப்பு குறைகிறது: ஐ.நா.
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...