|
| எய்ட்ஸ் மருந்து தயாரிக்க பிரிட்டன் உதவி |
எய்ட்ஸ் மற்றும் மலேரியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை குறைந்த விலையில் தயாரிப்பதற்கு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு ஒன்று நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனில் உள்ள சர்வதேச மேம்பாட்டிற்கான இணையமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் கூறுகையில், 'பிரிட்டனில் உள்ள கிளிண்டன் பவுண்டேஷன் அமைப்பு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவுள்ளது' என்றார்.
இதன்படி சுமார் 9 பவுண்ட் மதிப்பிலான உத்தேச நிதியுதவித் திட்டம் அடுத்த ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எய்ட்ஸ் மற்றும் மலேரியா நோய்களுக்கான புதிய சிகிச்சை முறைகளுக்கான தொழில்நுட்பத்தைப் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.
மேலும் குறைந்த விலையில் எய்ட்ஸ், மலேரியா நோய்களுக்கு மருந்துகளைத் தயாரித்து வழங்கவும் இது வழிவகை செய்யும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|