|
| 2030-ல் உலகின் பாதி பேர் 'பருத்த வீரர்கள்'! |
| வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008 ( 13:54 IST ) | |
2030-ம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் பாதி பேர் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாவர் என மருத்துவ ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது.
தற்போது மனித ஆரோக்கியத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் 'உடல் பருமன்'.
உடல் பருமன் தொடர்பாக, துலேன் யுனிவர்சிட்டி ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் ட்ரோபிகல் மெடிசனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
இதில், 2030-ம் ஆண்டில் உலக அளவில் 58 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சனைகளை போக்குவதில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதற்கான நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கும் அவர்கள், வளரும் நாடுகளில் உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது துரதிஷ்டவசமானது என்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|