|
| குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் தாய்ப்பால் : ஆய்வு |
| லண்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 13:18 IST ) | |
குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு மிகுதியாகவுள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மருத்துவப் பேராசிரியர் கிராமெர் தலைமையிலான குழு, பெலாரஸிலுள்ள 31 மருத்துவமனைகளில் ஆறரை வயது நிரம்பிய 14,000 குழந்தைகளைக் கொண்டு ஆய்வினை மேற்கொண்டனர்.
இதில், பாதி எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு அதிக காலம் தாய்ப்பால் அளிக்கச் செய்யப்பட்டது. மற்ற குழந்தைகளுக்கு வழக்கமான முறையில் தாய்ப்பால் உணவு வழங்கப்பட்டது.
இக்குழந்தைகளுக்கு ஐ.கியூ. (அறிவுத்திறன் அளவெண்) சோதனை மேற்கொள்ளப்பட்டதில், நீண்ட காலம் தாய்ப்பாலை உட்கொண்ட குழந்தைகள், வழக்கமான உணவுமுறையைக் கொண்ட குழந்தைகளைக் காட்டிலும் அறிவுத்திறன் மேன்மையாக இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன், கல்வியிலும் இந்த வேற்றுமை நிலவுவது உறுதி செய்யப்பட்டது.
எனினும், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு தாய்ப்பால் எந்த வகையில் ஊக்கமளிக்கிறது என்பது இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|