|
| நிமோனியாவுக்கு பலியாகும் குழந்தைகள்! |
| நியூயார்க் (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008 ( 12:57 IST ) | |
எய்ட்ஸ், மலேரியா, தட்டம்மை போன்ற கொடிய நோய்களைவிட நிமோனியா காய்ச்சல் காரணமாகவே அதிகளவில் குழந்தைகள் இறக்கின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எய்ட்ஸ், மலேரியா, தட்டம்மை போன்ற கொடிய நோய்களுக்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, நிமோனியா நோய்க்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
வறுமை, சத்தான உணவு கிடைக்காமை மற்றும் புகைப்பழக்கம், இடநெருக்கடி, சுகாதாரமின்மை போன்ற மோசமான சுற்றுப்புறச் சூழல் காரணமாக ஏழைக் குழந்தைகளே பெரும்பாலும் இந்நோய்க்கு பலியாகின்றன.
உலக நாடுகளில் நிமோனியா நோய் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|