|
| உடல் சூட்டைத் தணிக்க..
|
கோடை வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டது. இக்காலத்தில் உடல் அதிகம் உஷ்ணமாகி பல்வேறு உபாதைகள் வரக்கூடும்.
கோடையில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை ஏற்படும். உடல் சூட்டை தணிக்க இதோ சில எளிய குறிப்புகள்:
* உலர்ந்த ரோஜா இதழ்களை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, பின்னர், அதில் தேனைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்.
* உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் இளநீர், நுங்கு, மோர் போன்றவற்றை உட்கொள்வது உடல் சூட்டைத் தணிக்கும்.
* வாரம் தவறாமல் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை பெருமளவு குறைக்கும்.
* அடிக்கடி தண்ணீரைப் பருக வேண்டும். மண்பாண்டத்தில் குடிநீரை ஊற்றி அதில் கொஞ்சம் வெட்டிவேரை போட்டு வைக்கலாம். இந்த குளிர்ந்த தண்ணீர் உடல் சூட்டைத் தணிக்கும்.
* இரவு ஒரு டம்ளார் தண்ணீரில் ஒன்றிரண்டு வெந்தையத்தைப் போட்டு வைத்து, அந்த தண்ணீரை மறுநாள் காலை எழுந்தவுடன் உட்கொண்டால், உடல் சூட்டில் இருந்து தப்பலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - லாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர்... |
| |
|
|
|
|
 | | | காஞ்சிவரம் - விமர்சனம் | | பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மருத்தாக விளங்குகிறது... |
| |
|
|
|
|
|
|