யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
வறட்டு இருமலால் அவதியா?
அடிக்கடி வறட்டு இருமலால் அவதிப்படுபவர்கள் அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. இதற்கு எளிய பல மருத்துவங்கள் உள்ளன.

மழைக்காலம் முடிவடைவதற்குள்ளாகவே தற்போது லேசாக பனி பொழியத் தொடங்கியுள்ளது. பனி காலத்தில் சிலருக்கு இருமல், மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் வரலாம். அதற்கு மருத்துவ நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சில எளிதான நாட்டு வைத்தியக் குறிப்புகளைப் பார்ப்போம்.

வறட்டு இருமலுக்கு சிறிது தேன், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை பாலில் கலந்து குடித்தால் குணமாகிவிடும்.

இரவில் உறங்கச் செல்லும் முன் பாலில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு ஆகியவற்றைக் கலந்து இரண்டு நாட்களுக்கு குடித்தால் இருமல் பறந்துவிடும்.

எலுமிச்சம் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

மூக்கடைப்பு இருக்குமானால், ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து, பின்னர் வெதுவெதுப்புடன் மூக்கு மற்றும் தொண்டை, நெஞ்சுப் பகுதியில் தடவினால் மூக்கடைப்பு, சளித் தொல்லை சரியாகும்.

இவற்றையில்லாம் மீறி இருமல் மூக்கடைப்பு இருந்தால், அதை அலட்சியப் படுத்தக் கூடாது. இதற்கு உரிய மருத்த்வரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீராத தலைவலியை தீர்க்க....
இரவில் அசைவ உணவா? அறவே வேண்டாம்!
மழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
சைனசுக்கு புதிய முறை சிகிச்சை
ஆயுளை நீட்டிக்க... நடைப் பயிற்சியும், உணவுமுறையும்!
செல்போனால் ஆண்மைக்கு ஆபத்து!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...