|
| மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்! | |
தனது தாய் யார்? தந்தை யார்? என்பன போன்றவற்றை, முகத்தைக் கண்டே புரிந்துகொள்ளும் வல்லமை, மழலைகளிடம் உண்டு. இதை அனுபவப்பூர்வமாக அறிகிறோம்.
ஆனால், நமது முகத்தைக் கண்டு, நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதைக் கூட, வாய்பேசத் தொடங்காத மழலைகளால் புரிந்துகொள்ளும் பக்குவம் உண்டு என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; சைகைகளின் அர்த்தங்களைக் கூட, நான்கு மாத குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிகிறது என, லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, அன்றாட வாழ்வில் தம்மைச் சார்ந்த நபர்களை, வயதானவர்கள் பார்க்கும்போது, மூளையின் எந்த மண்டலங்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அவற்றையே மழலைகள் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், கோபமும் வருத்தமும் கொண்ட மனநிலையோடு, மழலைகளை அணுகக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
மாறாக, முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து காணப்படும் தருணங்களில், மழலைகளிடம் நமது முகத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|