யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
இதயநோய் வராமல் தடுக்க உதவும் பச்சை தேயிலை!
- எஸ்.சரவணன்
தேநீர் பருகும் பழக்கமுள்ளவர்கள், பச்சை தேயிலை (பதப்படுத்தப்படாத தேயிலை) மூலம் தயாரிக்கப்படும் தேநீரை அருந்தினால், இரட்டிப்பு பலனைப் பெறுவது உறுதி.

சுவை ஒருபுறம் இருக்கட்டும், இதய நோயகள் வராமல் காக்கும் வல்லமை, பச்சை தேயிலைக்கு உண்டு என்கின்றது கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வு.

பச்சை தேயிலையில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ், இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது என்று மருத்துவ ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக, ஏதென்ஸ் மெடிக்கல் ஸ்கூல் மேற்கொண்ட பரிசோதனையில், ஒரு தன்னார்வலர் குழுவுக்கு பச்சை தேயிலை மூலம் தயாரிக்கப்பட்ட தேநீர், 125 மில்லி கிராம் காஃபினுடன் 450 மில்லி லிட்டர் வெந்நீர் ஆகியவை வெவ்வேறு தருணங்களில் கொடுக்கப்பட்டது.

இதில், பச்சை தேயிலை மூலம் தயாரிக்கப்பட்ட தேநீரைப் பருகியோரின் இதயத் தமனி சிறப்பாக செயல்படுவது தெரியவந்தது.

இந்த வகை தேநீரை, தினமும் ஒரு கப் அளவில் பருகுவது நன்மை பயக்கும் என்று இந்த ஆய்வு தெரிக்கிறது.

இந்த ஆய்வு தொடர்பான முழு விபரமும், 'ஈரோப்பியன் ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் பிரிவென்ஷன் அண்ட் ரிஹேபிலிடேஷன்' இதழில் வெளியாகியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீராத இருமலா? இதோ தீர்வு!
ரத்த அழுத்தத்தை குணமாக்க....
குழந்தைகள் ஊட்டம் பெற....
கால் விரல் சுளுக்கினால்....
நினைவாற்றலை பெருக்க...
'தினமும் 4 கப் தேநீர் பருகுவீர்; மாரடைப்பு வராமல் தடுப்பீர்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...