|
| முடி உதிர்வதற்கு முற்றுப்புள்ளி | |
உணவு பழக்க வழக்கம் மற்றும் தண்ணீர் போன்றவற்றால் இளம் வயதிலேயே இன்றைய இளைய தலைமுறையினருக்கு முடி கொட்டிவிடுகிறது. முடியை சரிசெய்ய பல ஆயிரக்கணக்கான ரூ செலவில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூட தயங்குவதில்லை. அந்த அளவிற்கு முடி அழகிற்கு முக்கியமான காரணமாக கருதுகின்றனர்.
இனி உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் முடி உதிர்வதற்காக அயிரக்கணக்கில் செலவு செய்யவும் தேவையில்லை. முடி உதிர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வெந்தயப் பவுடர், கடுங்காய்த்தூள், டீத்தூள், மருதாணி, தயிர், ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதோடு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு ஊற்றி கலக்க வேண்டும்.
இரவில் இந்தக் கலவையைத் தயார்படுத்தி, மறு நாள் இதனை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், குளியல் பொடியைத் தேய்துக் குளித்தால், கொத்து கொத்தாக முடி உதிர்வது டக்கென்று நின்று விடும். மேலும் முடி கருகருவென்று அடர்ந்து வளர ஆரம்பிக்கும், இளநரையும் மறைந்து போகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|