|
| தசாவதாரம் | |
சோழர் காலத்து ரெளத்திரம் மிகுந்த வைணவ இளைஞன் முதல் ஜார்ஜ் புஷ் வரை 10 அவதாரங்களில் கம்பீரமாக வலம் வருகிறார் கமலஹாசன்!
இரண்டரை ஆண்டு கால எதிர்பார்ப்புடன் செல்லும் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு 'தசாவதாரம்' படத்தின் துவக்கமே, சீட்டின் நுனிக்குச் செல்ல வைக்கிறது.
பனிரெண்டாம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை..! "சிவம் மட்டுமே கடவுள்; கோவிந்த பெருமாள் சிலையை அகற்றுங்கள்" என்று உத்தரவிடுகிறார், குலோத்துங்க சோழன். இது நடப்பது சிதம்பரத்தில்.
அப்போது, வெகுண்டெழும் ரெளத்திரம் கொண்ட வைணவ இளைஞன் ரங்கராஜன் நம்பி (கமல் நெ.1), சோழப் படை வீரர்களை பந்தாடுகிறான். அவனிடம், " 'ஓம் நமசிவாய' என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லையேல் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்" என்று சோழ மன்னன் சொல்ல, நம்பியும் "ஓம்" என்று ஆரம்பிக்கிறான். ஆனால், "நமோ நாராயணாய" என்று முடித்து, வீரச்சாவுக்கு ஒப்புக்கொள்கிறான்...
இப்போது 2004... அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறையில் முக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவராக பணிபுரிகிறார் கோவிந்த் (வேறு யார், கமல்தான்). அவர் வகிக்கும் ஆராய்ச்சிக் குழு, உலகை அழிக்கும் வைரஸ் கிருமி ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அந்தக் கிருமியை நாச வேலைக்குப் பயன்படுத்துவதற்கு அக்குழுவின் தலைவர் முற்படுகிறார்.
இதையறிந்த கோவிந்த், வைரஸ் குப்பியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்... ஓடுகிறார்.... அவரை அதிபர் புஷ்சின் உத்தரவுடன் எஃப்பிஐ ஒருபுறமும், கூலிப்படைகள் மறுபுறமும் துரத்துகின்றன. அந்தக் குப்பி, சிதம்பரத்துக்கு வந்து சேருகிறது...
இதற்கு இடையே, நிகழ்பவைதான் சுவாரஸ்யாமான திரைக்கதையும் கமலஹாசன்களின் அணிவகுப்பும்!
சோழர் காலத்து ரெளத்திர வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன்,
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|