|
| புலன் விசாரணை-2
|
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'புலன் விசாரணை'.
ஆட்டோ சங்கரின் தொடர் கொலைகள் மற்றும் சிறுநீரகத் திருட்டு போன்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் மூலம் சரத்குமார் வில்லனாகவும், ஆர்.கே.செல்வமணி இயக்குனராகவும் அறிமுகம் ஆயினர்.
மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த படத்தின் 2ம் பாகத்தை தற்போது இயக்கியுள்ளார் ஆர்.கே.செல்வமணி. இதில் விஜயகாந்த்தின் போலீஸ் அதிகாரி வேடத்தை ஏற்றிருப்பவர் பிரசாந்த்.
அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் பிரஷாந்துக்கு 'நம்நாடு' கார்த்திகா, அஸ்வினி. அமீத்கான் என மொத்தம் மூன்று நாயகிகள்.
முதல் பாகத்தை தயாரித்த இப்ராஹிம் ராவுத்தரே, 2வது பாகத்தையும் தயாரிக்கிறார். படத்தில் நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர்.
முதல் பாகத்தில் நடித்த ஆனந்தராஜ், இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுகிறார்.
முக்கியமான ஒற்றுமை, முதல் பாகத்தை போலவே 2 ம் பாகமும் சென்சாரில் சிக்கி தவிக்கிறது.
முதல் பாகத்தை போலவே, 2ம் பாகமும் வெற்றி பெற்றால் ஹீரோ பிரஷாந்த், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|